தொடர்-4
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
.
.
“ஓவியர் ஹிட்லர்.”
.
ஹிட்லரின்
வாழ்வில் ரணங்கள் அமர்கிறது. அரசாங்கத்தின் உதவிப்பணம் கிளாராவை வந்தடைந்த நேரமது ஹிட்லர் ஓவியராகும்
தீரா ஆசையின் பெரும் தீ ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு
ரயிலேறி வந்தார்
புதிய தேசம் காத்துக்கிடந்தது
ரயிலேறும் போது
நினைத்திருப்பாரோ ஹிட்லர்
ஜேர்மனியின் வரலாற்றுப்
புத்தகத்தில்
தனக்கென்று சில பக்கங்களிருப்பதை.
ஆனால்,
Art Academy நுழைவுப் பரீட்சையில் ஹிட்லர்
தோல்வியடைந்தார்
சற்றே இடறினார்.
அந்த தருணமொன்றில்தான்
தாய் கிளாரா
47வது வயதில்
மார்பக புற்று நோயால் இறந்து போகிறார்.
தாய் கிளாராவின்
மொழியும் தாலாட்டுமில்லாத
பொழுது நிர்வாணமாய்க் கிடந்தது.
அவமானங்களும் தோல்விகளும்
மிகப் பெரிய சாதனையென
அவரின் இளமைக் காலத்தை நிரப்பினார்.
தாயின் சேமிப்பு
ஒரு வீடு கிடைக்கிறது.
உதவிப் பணத்திற்காய்
பொய்யான செர்ட்டிபிகேட்
தயாரித்து
ஹிட்லரின் கில்லாடித்தனமும்
அங்கு பயணப்பட்டது.
ஓவிய அட்டைகள் தயாரித்தார்
பிழைப்பு அதுவென இருந்தது
இரவில் மண்ணெண்ணை
விளக்கு வெளிச்சத்தில்
ஓவியங்கள் வரைவது
அவருக்குப் பிடித்திருந்தது.
ஹிட்லரின்
தூரிகைகளுக்குள் மொடல் அழகிகள்
விழுந்தனர்
அதனால் விற்பனையில்
உச்சமடைந்தார்
சொந்தமான ஓவியகூடம்
உருவாக்கினார்
இந்த கணமொன்றில்தான்
சிந்தியாவை காதலிஷம் கொண்டு
அதில் தோல்வியுமடைந்தார்
பின் அவசியப்படாத
நாடோடி வாழ்க்கையில்
இருள் வெளி வசிக்கலாயினது.
எனினும் புதிய பாதையை
தெரிவு செய்தார்
அது எதிரியை மிரட்டும்
ராணுவ சோல்ஜர்.
.
-வரிகள்-
.
கவிஞர்
நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
.
இக் கவிதை பற்றிய எனது கருத்து...
.
ரணங்களையும் கஷ்டங்களையும் தோளில் சுமந்தால் தான் வரலாறு பேசும் தலைவனாக ஆகமுடியும் என்று ஹிட்லரின் வாழ்க்கை கற்றுத் தருவது போல் அமைகிறது. சிறுவயதிலேயே சகோதரர்களின் இழப்பு, தந்தையின் கொடுமை, கல்வியில் வீழ்ச்சி, தாயின் மறைவு, Art Academy நுழைவுத்தேர்வில் தோல்வி என 25வயது கூடப் பூர்த்தியாகாத ஒரு இளைஞனால் எத்தனை ரணங்களை சுமக்க முடியும் என்று இன்னும் எனது எண்ணங்கள் கேள்வி எழுப்புகின்றன.
.
Art Academy பயிற்சி பெரும் பாக்கியம் கிடைக்காதது அந்த Academyக்கு தான் இழப்பு என்பது போல இருந்தது காவிய நாயகனின் தொழில் முழுநேர ஓவியராக திகழ்ந்ததும், அதன் மூலம் அவரின் வருமானம் அதிகரித்ததும், சொந்தமான ஓவியக்கூடம் உருவாக்கியதும்..
.
காவிய நாயகனின் பிற்காலங்களில் அவரின் தந்துரோபாயங்கள் புதிதாக அவர் கற்றுக் கொண்ட விடயம் அல்ல என்பதற்கும் அது அவரது பிறப்பியல்பு என்பதற்கும் "பொய்யான செர்டிபிகேட் தயாரித்து, ஹிட்லரின் கில்லாடித்தனமும் அங்கு பயணப் பட்டது" என்று கவிஞர் கூறிச் செல்லும் வரிகள் சான்றாக விளங்குகின்றது.
தன் தாயை இழந்த காவிய நாயகன் ஈடு செய்ய முடியாத அந்த இழப்பினை எவ்வாறு தாங்கிக்கொண்டான் என்ற ஒரு அனுதாபக் கேள்வி என்னுள் வந்துசெல்கிறது "தாய் கிளாராவின்
மொழியும் தாலாட்டுமில்லாத
பொழுது நிர்வாணமாய்க் கிடந்தது" என்று பாடும் கவிஞரின் மொழித் திறமையை கடந்து செல்கையில்.
அவரும் மனிதன் தானே... அவரும் ஆண் மகன் தானே... அவருக்கும் காதல் வரலாம் தானே... அதில் என்ன தவறுள்ளது.
தொடர் தோல்விகளுள் இன்னுமொன்று தானாகவே இணைந்து கொள்கிறது, இல்லையென்றால் வளமை போல இவர் விரும்பாத போதும் காதலி சிந்தியா மூலம் காலம் அந்த தோல்வியினை அவரினுள் புகுத்திச் செல்கிறது.
இருள் நிறைந்த அவரது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக புதியதொரு சூழலை தேடித் செல்வதாக கவிஞரின் அடுத்த பாகம் விரிகிறது...
.
.
5. ராணுவத்தில் ஹிட்லர் வாழ்வின்
.
.
தொடரும்...
.
.
குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப்
பிழைகள், பொருட் பிழைகள்
ஏதேனும் இருப்பின் முதற்கண்
தயவுடன் என்னை மன்னியுங்கள்.
அத்தோடு நின்று விடாமல்
பிழைகளையும் சற்றே தெளிவு
படுத்தி விடுங்கள்.
.
2. முழுக்க முழுக்க எனது
சிந்தனைகளுக்கு உதயமான
விடயங்களை வைத்து மட்டுமே
விவரணம் செய்யத்துளேன்.
.
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
10-ஜூலை-2018