Facebook Post
தொடர்-2
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
"ஒரு தந்தையின் கொடுமை"
ஹிட்லரின் இளமைப் பருவமது
இரண்டாம் பெரிய தாய்
இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
ஹிட்லரின்
சூரியன் கறுப்பு நிறத்தால்
வடிவமைக்கப்பட்டு
நிசப்தம் குலையும் நேரமது
அவளது மனக் குடுவையிலிருந்து
கோபம்
ஹிட்லரையும்
அவரது சகோதரி பவுலாவையும்
கூரிய நகங்களாய்ப் தின்றது.
யுகயுகமாய்
அவரது தாயே
தவமெனக்கிடந்த
தந்தை அலய்ஸ் ஹிட்லர்
தாய் கிளாராவை துன்புறுத்தும் தருணங்களில்
தந்தையை வெறுத்தார்
அவமானத்தால் அழுதார்
மௌனித்திருக்கும்
தன் தாய் மீது
பாசத்தின் பிரதியைக் கொண்டாடினார்
ஏழு வயது சிறியவளான
தங்கை பவுலா
பருவ வயதையடைந்தாள்
அவரது தந்தையின்
வெறி கோரமடைந்து
மேய்ப்பாளனான அவர்
மிருகமாய்
முடிவுறா கோபங்களை
மீண்டும் மீண்டும்
ஓதினார்
பல சொற்கள்
அங்கு நிர்வாணமாய்க் கிடந்தது.
காலங்கள் உடைந்து
அவரது பாதை
காயங்களால் ஆனவை
என்கிற குறிப்பை
ஹிட்லரின்
மெயின் கேம்ப்
சுய சரிதையின்
பதிவேடு நூற்றாண்டுகள் வாழ்ந்து
சாட்சி சொல்கிறது
இருளைப் பற்றியபடி.
இரண்டாம் பெரிய தாய்
இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
ஹிட்லரின்
சூரியன் கறுப்பு நிறத்தால்
வடிவமைக்கப்பட்டு
நிசப்தம் குலையும் நேரமது
அவளது மனக் குடுவையிலிருந்து
கோபம்
ஹிட்லரையும்
அவரது சகோதரி பவுலாவையும்
கூரிய நகங்களாய்ப் தின்றது.
யுகயுகமாய்
அவரது தாயே
தவமெனக்கிடந்த
தந்தை அலய்ஸ் ஹிட்லர்
தாய் கிளாராவை துன்புறுத்தும் தருணங்களில்
தந்தையை வெறுத்தார்
அவமானத்தால் அழுதார்
மௌனித்திருக்கும்
தன் தாய் மீது
பாசத்தின் பிரதியைக் கொண்டாடினார்
ஏழு வயது சிறியவளான
தங்கை பவுலா
பருவ வயதையடைந்தாள்
அவரது தந்தையின்
வெறி கோரமடைந்து
மேய்ப்பாளனான அவர்
மிருகமாய்
முடிவுறா கோபங்களை
மீண்டும் மீண்டும்
ஓதினார்
பல சொற்கள்
அங்கு நிர்வாணமாய்க் கிடந்தது.
காலங்கள் உடைந்து
அவரது பாதை
காயங்களால் ஆனவை
என்கிற குறிப்பை
ஹிட்லரின்
மெயின் கேம்ப்
சுய சரிதையின்
பதிவேடு நூற்றாண்டுகள் வாழ்ந்து
சாட்சி சொல்கிறது
இருளைப் பற்றியபடி.
-வரிகள்-
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
இக் கவிதை பற்றிய எனது கருத்து...
தொடர்-1 றிலே "இந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற வாசகத்தினை சுட்டிக் காட்டியிருந்தேன். இந்தத் தொடரில் மேற்கூறிய வாசகத்தின் தொடர்ச்சியினையும் ஞாபகமூட்டி விடுகிறேன்.
"அது நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே" இதுவே அந்த வாசகத்தின் தொடர். இந்த வாசகத்தினை எழுதிய கவிஞர் அன்னை என்ற சொல்லோடு தந்தை, மற்றும் சூழலின் தாக்கம் என்ற சொற்களையும் மறைமுகமாகவே சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அன்னையின் வாசமறியாத நல்லவர்களும் உள்ளார்கள், நேர்த்தியான வளர்ப்பினைக் கையாண்ட அன்னையின் வளர்பிலான கெட்டவர்களும் உள்ளனர்.
ஹிட்லருக்கு மாத்திரமல்ல எவருக்கும் இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. அதவாது ஹிட்லரின் தந்தை பலதார மணமுடித்தது அல்ல, மாறாக சம உடமை அல்லது சம உரிமை கொடுக்கப் படாதது.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற முன்னோர் கூற்று உண்மையாவது போல் அமைகிறது காவிய நாயகனின் 2வது பெரிய தாயின் அதே கோபம் அவரது தந்தையிடத்திலும் பிரதிபலிப்பதிலிருந்து.
எந்தப் பிள்ளையும் தனது தந்தையின் அரவணைப்பினையும் அன்பினையும் அதிகம் விரும்பும். அது கிடைக்காத சந்தர்ப்பங்களில் அல்லது அதற்க்கு மாற்றமாக கிடைக்கும் நேரங்களில் சகித்துக் கொள்ள அல்லது பொறுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளும். அதே குழந்தை தன் தந்தை தனது தாயினை துன்புத்தும் போதோ அல்லது தனது தாயினை தரக் குறைவாக நடத்தும் போதோ அதனை ஏற்றுக் கொல்வதுமில்லை வெறுமனே வேடிக்கை பார்த்து நிற்பதுமில்லை என்பதற்கு கவிஞர் கூறும் "தந்தையை வெறுத்தார், அவமானத்தால் அழுதார்" என்ற வரிகள் சுட்டிக் காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் "மௌனித்திருக்கும் தன் தாய் மீது பாசத்தின் பிரதியினைக் கொட்டினார்" என்ற வரிகள் காவிய நாயகனின் கனிவுள்ளத்தினை எமக்கு படம்போட்டுக் காட்டுகிறது.
ஹிட்லரின் பின்னைய காலத்து வாழ்க்கையில் அவரின் கடினமான வார்த்தைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவரின் தந்தையின் வாயிலிருந்து வடிந்து அவரின் சூழல் முழுக்க பரவிக்கிடந்த நிர்வாணமான சொற்களும் காரணமாக இருக்கலாம் என்பதற்கு நூற்றாண்டுகளாக வாழ்ந்து கிடக்கும் "ஹிட்லரின் மெயின் கேம்ப்" என்ற சுயசரிதை மட்டும் சான்றல்ல. இனிவரும் நூற்றாண்டுகளுக்கு வாழப் போகும் {"ஏ. நஸ்புள்ளாஹ் வின் ("ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்")} என்ற நூலும் சான்றாக வாழும்.
மேலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினைகள் வரும் போது உலகமே இருண்டு விட்டதே என்றுதான் அதிகமாக அழுது புலம்புவோம், ஆனால் இங்கு ஹிட்லருக்கு சிறுவயதிலேயே ஏட்பட்ட பிரச்சனைகளை "ஹிட்லரின் சூரியன் கறுப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டு நிசப்தம் குலையும் நேரமது" என்ற வரிகள் மூலம் கவிஞர் எடுத்தியம்புவது சுவாரஸ்யமானது மட்டுமல்ல மேட்கொண்டு பயணிக்க எமக்கு உத்வேகமளிக்கிறது.
மேலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினைகள் வரும் போது உலகமே இருண்டு விட்டதே என்றுதான் அதிகமாக அழுது புலம்புவோம், ஆனால் இங்கு ஹிட்லருக்கு சிறுவயதிலேயே ஏட்பட்ட பிரச்சனைகளை "ஹிட்லரின் சூரியன் கறுப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டு நிசப்தம் குலையும் நேரமது" என்ற வரிகள் மூலம் கவிஞர் எடுத்தியம்புவது சுவாரஸ்யமானது மட்டுமல்ல மேட்கொண்டு பயணிக்க எமக்கு உத்வேகமளிக்கிறது.
இனிதே நகரும் இந்தக் கவிக் காவியத்தின் அடுத்த பாகம் ஹிட்லரின் கல்வி பற்றியது.
3. கல்வியில் மந்தம் ஹிட்லர்.
தொடரும்...
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
8-ஜூலை-2018
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
8-ஜூலை-2018
No comments:
Post a Comment