Saturday, July 7, 2018

தொடர்-1 "குழந்தை ஹிட்லர்"

Facebook Post


தொடர்-1
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

"குழந்தை ஹிட்லர்"

சரித்திர வீரர்
ஹிட்லர்
வெண்ணிறப் பறவை
காஸ்தாப் ஜூம் பொம்மர் நகரத்தில்
அலய்ஸ ஹிட்லரின்
மூன்றாம் மனைவி
கிளாரா போல்ஸிக்கு
ஆறு குழந்தைகளில்
நான்காம் குழந்தையாய் பிறந்தார்.
மிரட்டும் கண்கள்
சாம்பல் நிறப் பார்வை
பூமியை
ஆளும் ஆன்மம்
சகோதரம்
நால்வர் சிறுவயதிலயே இறந்துவிட்ட
அந் நாளில்
அதன் துயரத்தை
பகிரத்தெரியாத பருவம்.
நாயகன்
அடால்ப் ஹிட்லரும்
கடைசி தங்கை
பவுலா ஹிட்லர் இருவருக்குமாக
எதிர்காலமொன்றுக்கான
கேள்விகள்
அவர்களிடம் இருந்தது.
ஹிட்லரின் குறும்பில்
பவுலா சிரித்துக் கொண்டிருந்தாள்.
சகோதரன்
நாளை பூமியின்
நரப்புகளை இசைப்பான்
என்கிற சரித்திரம் தெரியாமல்.
-வரிகள்-
கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.


"குழந்தை ஹிட்லர்" கவிதை பற்றிய எனது பார்வை.


"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற வாசகமே நினைவிற்கு வருகின்றது.
சகோதரர்கள் இறந்த செய்தியினையும் அதன் இழப்பின் தாக்கத்தினையும் அறிந்து விளங்கமுடியாத பருவத்தில் தன் தங்கையினை மகிழ்விக்க குறும்பு செய்யும் எமது காவிய நாயகன் யாருமே துள்ளியமாக கணிக்க முடியாத எதிர்காலத்தில் பெரும்பாலானவர்களிடம் கெட்ட பெயரைத்தான் சம்பாதிக்கப் போகின்றான் என்பதை நாயகனின் குறும்பில் மகிழ்ந்த தங்கை மட்டுமல்ல காவிய நாயகன் குழந்தை ஹிட்லர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இக் கவியில் கவிஞரின் "நாளை பூமியில் நரப்புகளை இசைப்பான்" என்ற வார்த்தை ஜாலம் இலக்கிய வாசம்/ ஞானம் குன்றிய என்னை அடுத்த கவித் தொடரினுள் ஆர்வமிகுதியுடன் நுழைந்து விட அழைப்பு விடுக்கின்றது.
2. ஒரு தந்தையின் கொடுமை.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
7-ஜூலை-2018





No comments: