Facebook Post
தொடர்-8
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
.
.
"ஹிட்லரின் எனது போராட்டம்"
.
பேசா பொருளை பேசும் காலமாக
யாவற்றையும் பேசும் களமாக
சிறை ஹிட்லருக்கு அமைந்தது.
சிறையிலிருந்து கொண்டு
ஹிட்லர்
எனது போராட்டம்
என்கிற உலகப் புகழ் பெற்ற
"இனம்" என்கிற விஷயத்தை
எழுதினார்
அடிமைத்தனத்தின்
முதுகிலேறி
நிஜங்களின் நிலையில்
ஹிட்லர் பயணப்பட்டார்
அது வார்த்தைகளின்றி
வரலாற்று மூலதனமென
புதியதொரு வெளியை
நோக்கி
சொற்களின் திரவமாய்
தேசமெங்கும் வழிந்தோடியது.
அவரது
மனதில் வழியும் நிணத்தை
சுமக்கும் காற்றாய்
எனது போராட்டம்
புத்தகம் உணர்த்தியது.
அன்று
பலரின் கண்களை திறந்தது
அந்தப் புத்தகம்.
உலகை வழி நடத்தும்
தகுதியுடையவர்கள்
ஜேர்மனியர்கள்
அவர்களுக்கு மட்டும்தான்
உலகை வழிநடத்த
தகுதியுண்டு
என்று ஹிட்லர்
புத்தகத்தில் முழங்கினார்
அது அவரை
ஒரு உச்ச கதாபாத்திரமாக
ஜேர்மனியர்களின்
மனக் கதவில் தட்டியது.
வெகு நுட்பமாக
தன்னை
ஜேர்மனியர்களுக்குள் நுழைத்தார்
யூதர்களையும்
கம்யூனிஸ்ட்களையும்
மிகக் கேவலமாக
அவர்
எனது போராட்டத்தில் சாடினார்
யூதர்கள்
ரஷ்யர்கள்
மனநிலை பாதிக்கப் பட்டவர்கள்
இல்லாத
ஒரு யுகத்தை உருவாக்க வேண்டுமென்று
ஹிட்லர் தனது
கருத்தை முன்வைத்தார்
புதிய திசையை
மொழியின் வலிமையில்
மீட்டெடுத்தார்
மற்றவர்களையும்
தனது கருத்திற்கு
உடன் படுத்தினார்
அந்த சமயம்
இந்தியா பிரிட்டனின்
காலனியாக அடிமைப்பட்டிருந்ததை
ஹிட்லர் தனது புத்தகத்தில்
ரஷ்யா
ஜேர்மனியின் இந்தியாவாக
இருக்க வேண்டுமென
குறிப்பிட்டு
மொழியின் நரம்புகளை
நிலமெங்கும் வரைந்தார்.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
9. ஹிட்லரின் மக்கள் புரட்சி…
தொடரும்....
.-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்.
14-ஜூலை-2018
No comments:
Post a Comment