Wednesday, July 11, 2018

தொடர்-5 . . “ராணுவத்தில் ஹிட்லர்”

Facebook Post


தொடர்-5

("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

.

.
“ராணுவத்தில் ஹிட்லர்”

.
வாழ்வின் அதிர்வுகளிருந்து
தாளாது
இயலாமையின் மறு அமர்வு தாண்டி
ஹிட்லர்
ஜேர்மனிக்கு வந்தார்
வழியும் மீளத் திரும்பா
கனவுகளுடன்
ராணுவத்தில் சேர்ந்தார்
வாழ்வின் வெம்மையும்
போருக்கான விருப்பமும்
அவரது வயது 25
முதல் உலகப் போர் தொடங்கிய
தருணமது 1914 - 1918
ஓடுதலால் போரிடுதல் என்கிற
ரன்னர்
பணி அவருக்கு வழங்கப்பட்டது.
போரிடும் வீரர்களுக்கு
ஓடிச்சென்று
கட்டளைகளை தருவது.
இறகுகள் முளைத்த
காற்றாய்ப் பறந்தார்
நூற்றாண்டுகள் நிரப்ப முடியாத
திசையை தெரிவு செய்தார்
வெடிகுண்டுகள் முழங்கும்
போர்க் களத்தில்
வெறி பிடித்து இயங்கினார்
வெடி குண்டுகளை ஏமாற்றி
தனதெல்லாப் பொறி முறைகளையும்
பாதையாக்கிப் பாய்ந்தார்
ஹிட்லரின்
கடமையைப் பாராட்டி
Iron cross பதக்கம் அணிவிக்கப்பட்டது.
மஸ்டர்ட் வாயு வீசப்பட்டதால்
அவரின்
ஒரு கண்ணும் நுரையிரலும்
தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.
தேசத் துரோகிகளை
குறி வைத்தார்
மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்ட
ஹிட்லர்
இது யூதர்களின்
துரோகமென
கதறி அழுதார்
கம்யூனிஸ்ட்களையும்
யூதர்களையும் வெறுத்தார்
தோல்விகளுக்கு காரணமான
அவர்களை அழிக்கப் போறனென
கர்ஜித்தார்
புதிதாக அமையப்பெற்ற
தேசிய சோசியலிஸ்ட்
கட்சியில் உறுப்பினராய்
இணைந்து கொண்டார்
ஹிட்லரின்
மிதந்து வழிகின்ற கதையில்
எப்போதுமிருக்கிறது வானத்து அரசியல் கனவு.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
.

இக் கவிதை பற்றிய எனது கருத்து...

.
வாழக்கையில் அதிகம் துன்பங்களைச் சுவைத்தும் ரணங்களைப் பருகியும் பழக்கம் கொண்ட கதா(தை)நாயகன் வியென்னாவில் இருந்து ஜெர்மனி நோக்கி தனியாக படையெடுக்கின்றனர் தனது கனவுகள் படை சூழ.
அவரது கனவுகள் சுமந்த முடிவு அவரது 25வது வயதில் 1914ம் வருடம் அவரை இராணுவத்தில் இணைக்கிறது. "செலவோடு செலவாக செருப்பும் ஒரு ஜோடி" என்ற பழமொழி போல ரணங்களோடு ரங்களாக இத்தனையும் சுவைத்து விடலாம் என்று எண்ணம் கொண்டாரோ இல்லை "முயற்சி திருவினையாக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப பின்னைய காலத்தில் வரலாற்றில் தனக்கென அழியா இடமுண்டு என்பதை முன்பே கணித்து திட்டம் கொண்டாரோ! எதுவாக இருந்தாலும் தெளிவாக எதுவும் தென்படவில்லை. தற்போது புலத்திற்கு தெரிவது ஹிட்லர் இராணுவத்தில் இணைந்தார் என்ற செய்தி மட்டுமே.
முதலாம் உலகப் போர் காலத்தில் போர்க்களத்தில் தகவல் பரிமாறும் அல்லது தகவல் தொடர்பாடல் கருவியாகவே அவரின் பணி இருந்தாலும் அவர் சலிப்பின்றி சிரிப்போடு செய்ததன் விளைவும், அவரது சாமர்த்திய சிந்தனையும் அத்தொழிலை அவரின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் திட்டத்திற்குமென திட்டமிடச்செய்தது போலும்.
அதன் பிரதிபலிப்பே அணுகுண்டு வீச்சில் கண்ணும் நுரையீரலும் பாதிக்கப்பட்ட பின்பும் தேச துரோகிகளை அழிப்பது என்ற எண்ணம் மேலோங்கியதும் அரசியலின் புதிய பங்காளியாய் இணைவதும் என்ற கவிஞரின் வரிகள் மூலம் இலகுவாகவே எம்மால் உணர முடியும்.
அவரது அரசியல் பயணத்தினையும் அதன் அடைவு முன்னேற்றத்தையும் அறிய கவிஞரின் வரிகள் அடுத்த பாகத்திற்கு எம்மை அழைத்துச் செல்கிறது.
.
.

6. அரசியல் கட்சியில் ஹிட்லர்.
.
.
தொடரும்...

.
.
குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப்
பிழைகள், பொருட் பிழைகள்
ஏதேனும் இருப்பின் முதற்கண்
தயவுடன் என்னை மன்னியுங்கள்.
அத்தோடு நின்று விடாமல்
பிழைகளையும் சற்றே தெளிவு
படுத்தி விடுங்கள்.
.
2. முழுக்க முழுக்க எனது
சிந்தனைகளுக்கு உதயமான
விடயங்களை வைத்து மட்டுமே
விவரணம் செய்யத்துளேன்.
.
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
11-ஜூலை-2018


No comments: