Monday, July 9, 2018

தொடர்-3 “கல்வியில் மந்தம் ஹிட்லர்”



Facebook Post



தொடர்-3
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
.

.

“கல்வியில் மந்தம் ஹிட்லர்”

.
ஹிட்லரை
தந்தை அலய்ஸ ஹிட்லர்
வீட்டிலிருக்கும்
நாயோடு ஒப்பீடு செய்தார்.
அக்கணங்களில்
துயர்தல் கிளைத்து நீண்டு
வாழ்க்கை இருளின்
பக்கங்களாய் மாறியது.
கல்வியில்
சாதித்த ஹிட்லர்
ஆறாம் வகுப்பில்
தொய்வு கொண்டார்
அதற்கு
குடிகார தந்தையின்
மிருக நிலைகள்
அவரைக் கடந்து
செல்கின்றமையும் ஒரு சூழல்.
22ம் நூற்றாண்டின் தத்துவவியலாளர்
லுட்வக் விட்ஜென்ஸ்டின்
ஹிட்லரைவிட
இரண்டு வகுப்புகள்
மேலே படித்தார்
கல்வியில்
விருப்பமின்மைக்கு
ஹிட்லருக்குள் வளர்ந்த
ஓவியக் கனவுமொன்று.
போர்கள் பற்றியதான
நாவல்களை தேடியலைந்து
வாசித்தார்
சுங்க அதிகாரியான தந்தை
அலய்ஸ ஹிட்லர்
03 ஜனவரி 1903 அன்று
உயிர் திறந்தார்.
ஹிட்லரின்
வாழ்வில் வலியின்
பக்கங்கள் தலை நீட்டியது.
பரவியிருந்த இருளில்
மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.
16ம் வயதில்
டிப்ளோமா பட்டம்
பெறா நிலையில்
மிகத் தற்செயலாய் வெளியேரினார் ஹிட்லர்.
.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
.

இக் கவிதை பற்றிய எனது கருத்து...


இக்கவியின் ஆரம்ப வரிகளை வெறுமனே கடந்து செல்ல முடியாதிருந்தது.
“உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” என்றுதான் உவமைகளும் ஒப்பீடுகளும் அமையவேண்டும் என்பது தமிழன்னையின் தூண்களிலொருவரான தொல்காப்பியர் வாக்கு.
ஆனால் கோபமும் மிருகத்தனமும் அதிகரிக்கும் சமையங்களில் உயர்ந்ததோடு மட்டுமல்லாது தாழ்ந்ததோடும் ஒப்பிட முடியும் என்ற, கம்பராமாயணத்தில் இடம்பெற்ற "சிங்கக் குருளைக்கு இடுதீம் சுவை ஊனை,
நாயின் வெங்கண் சிறுகுட் டனை ஊட்ட விரும்பினாளே!" என்ற இலக்குவணனின் கோபத்தை எடுத்தியம்பும் மேலே கூறப்பட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்து செல்கிறது காவிய நாயகனின் தந்தையே நாய்க்கு ஒப்பிடும் வார்த்தைகளைப் படிக்கும் போது.
கல்வியில் சற்றுத் தளர்வு கண்ட நாயகன் தன்தந்தையையும் இழக்கிறார். வெறுப்புகள் மட்டுமே தந்தை மீது படர்ந்திருந்தாலும் இரங்கல் செய்தி கேட்ட பின்னர் காவிய நாயகன் சற்றுக் கலங்கியிருக்கக் கூடும் என்பது எனது எண்ணத்தில் உதிக்கின்றது. காரணம் இப்போதுதான் கவியநாயகன் 14 வயதைக் கடந்து விட்டாரே.
தந்தையின் இறப்பு சற்றே கலக்கத்தை ஏற்படுத்திருப்பினும் அவரின் வாழ்க்கைப் பக்கங்களில் பரவியிருந்த இருளில் மீண்டும் கண்ணீர் துளிர்த்ததாக கவிஞர் கூறுவது தனது அரியவகைச் செல்வங்களான அம்மாவையும் தங்கையையும் எவ்வாறு கரை சேர்ப்பது என்ற எண்ணமுமாக இருக்கக் கூடும். ஏனெனில் எமது நாயகன்தான் ஆண்மகனாயிற்றே.
கல்வியில் உயர்வு நிலையினை அடையவில்லையெனினும் அவர் உச்சத்தினை அடைந்தது பற்றி தொடர்ந்து வரும் ஆக்கங்கள் எமக்குக் கற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
.

.
4. ஓவியர் ஹிட்லர்
.
.
தொடரும்...
.


.
குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப்
பிழைகள், பொருட் பிழைகள்
ஏதேனும் இருப்பின் முதற்கண்
தயவுடன் என்னை மன்னியுங்கள்.
அத்தோடு நின்று விடாமல்
பிழைகளையும் சற்றே தெளிவு
படுத்தி விடுங்கள்.
.
2. முழுக்க முழுக்க எனது
சிந்தனைகளுக்கு உதயமான
விடயங்களை வைத்து மட்டுமே
விவரணம் செய்யத்துளேன்.
.
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
9-ஜூலை-2018



No comments: