Facebook Post
தொடர்-7
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
..
"ஹிட்லரின் சிறை வாழ்க்கை"
.
ஹிட்லரின்
குருதிக்குள்
அரசியல் மீள்தல்
பெருந் தீயென
வரையப்பட்டது.
ஹிட்லர் கட்சி
சின்னமாய்
"ஸ்வஸ்திகா"வை
தெரிவு செய்தார்.
இலட்சியம் எதிரிகளை
அளிக்க தனித்தலைந்தது.
அரசாங்கத்தின்
நிர்வாகத்திறமை
இன்மையால்தான்
நாட்டில்
வறுமையும் வேலையில்லா
திண்டாட்டமும்
என
பிரச்சாரம் செய்தார்
அதிகாரத்தின் கூர்வாளாய்
அது அனைவரையும்
இன்னுமின்னும்
தின்னாது துவங்கியது.
அரசாங்கத்திற்கு
எதிராய்
மக்களை தூண்டிவிட்டு
ஆட்சியை
கைப்பற்ற முயன்றார்
எனினும்
ஹிட்லரை ஒரு
பெரும் துயர் காத்திருந்தது.
அது காலத்தை அளந்தது
அரசுக்கெதிராய்
செய்த
பிரச்சாரத்தில்
தோல்வியடைந்தார்
1923 இல் அரசாங்கத்தை
கவிழ்க்க முயற்சி
செய்த
குற்றப் பிரிவில்
அவரும் சகாக்களும்
சிறையில் அடைத்து
5 ஆண்டுகள் தண்டனை
நிறைவேற்றியது
ஜேர்மன் அரசு.
சிறை நாட்கள்
அவருக்கு எல்லையற்ற
பறத்தலின் சிறகுகளாய்
அமைந்தது.
எனினும் பின்னர்
சிறைத் தண்டனை
ஓராண்டாக்க குறைக்கப்பட்டது
முதல் கூட்டம்
நடத்திய
மூன்று ஆண்டுகளில்
ஒரு ஆளும் அரசை
பயமுறுத்தி
உயர்ந்தவர் ஹிட்லர்
அவர்
சித்தாந்தமில்லாத
கட்சிக்கு
சித்தாந்தத்தை
உருவாக்கினார்
அப்போதுதான்
ஹிட்லர்
சிறையிலிருந்து
கொண்டு
எனது போராட்டம்
புத்தகத்தை எழுதினார்.
ரெக்கைகள்
பிய்க்கப்பட்ட
பறவையாய்
எரிந்து கொண்டிருக்கும்
அவரது கணமது.
***
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.8. ஹிட்லரின் எனது போராட்டம்...
.
.தொடரும்... .
...
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்.
13-ஜூலை-2018
No comments:
Post a Comment