Thursday, July 12, 2018

தொடர்-6 "அரசியல் கட்சியில் ஹிட்லர்"


Facebook Post


தொடர்-6

("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து).

.

"அரசியல் கட்சியில் ஹிட்லர்"

.
ஹிட்லரிடம்
நிசப்தத்தைக் குலைக்கும்
சக்தி நதியாய் பாய்ந்தது.
தேசிய சோசியலிஸ்ட் கட்சியில்
அப்போது நூற்றுக்கு மேற்பட்ட
உறுப்பினர்களே வகிபாகம் செய்தனர்
மாலை நேரங்களில்
யார் வீட்டு மொட்டை மாடியிலாவது கூடி
அரசை திட்டித் தீர்ப்பதே
அக்கட்சியின் போக்காக இருந்தது.
அவர்களின்
உரையாடலில் நட்சத்திரங்கள்
மௌனமாய் விழுந்தன.
1920 பெப்ரவரி 29ம் திகதி
முதல் பொதுக் கூட்டம்
ஹிட்லர் முதல் உரையை
உணர்ச்சிப் பிழம்பாய்
உடல் நடுங்க
கண்கள் கலங்க
ஆவேசத்தோடு
ஆன்மாவின் நரம்புகள்
ஊடுறுவ பாய்த்தார்
அவர் ஆற்றிய உரையில்
கட்சி ஆர்வலர்கள்
உணர்ச்சி வசப்பட்டு
அவரைக் கொண்டாடினர்.
இளம் தலைவர் ஹிட்லர்
அவரது சக்தியை அவரே
உணர்ந்த தினமது.
மேய்ப்பவனின் நிதானத்தோடு
காலங்களை உடைத்து
மனக் கிளையைத் தாவிச் சென்றது.
ஓரிரு ஆண்டுகளில்
ஹிட்லரின்
உரைக்காக மக்கள் திரண்டனர்
அவர் மக்கள் மத்தியில்
ஜேர்மனியர் மிகச் சிறந்தவர்கள்
என்பதை விதைத்தார்
அரசியலில்
தைரியமாய் நீந்தி
விதிகளுக்குள் அடங்காத
தலைமையாய் அவரை
மக்கள் ஆன்மாவிற்குள் பாய்ந்தார்..
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.

7. ஹிட்லரின் சிறை நாட்கள்.

.
.

தொடரும்...

.
..
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்.
12-ஜூலை-2018




No comments: