Tuesday, June 19, 2018

கனவின் மிகுதியைக் காணவில்லை.

Facebook Post


ஒளி படர்ந்த ஒரு தேசம் நோக்கி 
வண்டுகளாலும், வண்ணத்துப்பூச்சிகளாலும் 
கவர்ந்துசெல்லப்படுகிறேன்.

அங்கு பலபேர் பூமியிலிருந்து புதிதாக முளைத்துக் கொண்டிருந்தார்கள்... 
சிலர் வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்...
அவர்களைப் பார்ப்பதற்கு ஆவலுற்ற நான் 
அவர்கள் ஒன்றுகூடும் இடத்தை நோக்கித் தவழ்ந்தே செல்கிறேன்...
தவழ்ந்து செல்லக் காரணமும் இரண்டுண்டு...

ஒன்று -
அங்கு தவழ்ந்து மட்டுமே செல்லமுடியுமாக இருந்தது...
மற்றொன்று -
நான் இன்னும் நடக்கக் கற்றுக்கொள்ளவில்லை...

அவர்களை அண்மிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை,
இப்பொழுதே அவர்களை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
அவர்கள் அனைவரினது கைகளிலும் மயில் தோகை 
ஒவ்வொன்று கொடுக்கப்பட்டிருந்தது...

என்னவொரு ஆச்சர்யம், 
என்னையொத்த தோற்றமுடை 
ஒருவனும் அங்கே அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தான்...
அனைவரும் குதூகலமாக,
ஆரவாரத்துடன் ஆனந்தமாக இருக்கும் இத்தருணத்தில்
என்னையொத்த தோற்றமுடைய அவன் மட்டும் - 
தலை கவிழ்ந்தவனாக அமைதியிழந்து, 
அமைதியாகி அமர்ந்திருக்க 
காரணம் என்னவோ?...

காரணமறிய 
உங்களைவிடவும் ஆவலாகவே 
நான் அவனை நெருங்கிச் செல்கிறேன்,
ஏனெனில் அவன்தான் என்னையொத்த -
உருவமுடையவன் ஆயிற்றே...

அவனின் கவலை மிகுதிக்கான 
காரணத்தை அறிந்தால் 
கண்டிப்பாக உங்களுக்கும் சொல்வேன்.

அவன் பெயரேனும் அறியக் கிடைக்காமல் போயிற்று... 
அதற்கிடையில் பொழுதும் புலர்ந்திற்று... 
உண்டான கனவும் கலைந்திற்று... 

கனவின் மிகுதி 
நாளையும் என்னோடு கலக்கவேண்டும்... 
கலந்தால் மட்டுமே 
கதையின் மிகுதியும் தொடரும்...

-நன்றி-


-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
19-Jun-2016


Wednesday, June 13, 2018

சுடுசொல் - 07

Facebook Post



ஊரிலுள்ள அனைவரையும் பார்த்து 
பைத்தியகாரர்கள் என்றுகூறி நகைத்தபடியே 
சென்றான் தன் சுயம்தொலைத்த -
அந்த பைத்தியக்காரன்.

குறிப்பு - நிச்சயமாக இது அரசியல் பதிவில்லை என்று நம்பவும்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018  

சுடுசொல் - 06

Facebook Post



இத்தனை வருட காலமாக 
ஆபாசத்தையே நானும் அனிந்தேனா? 
என்ற வெட்கித்து குறுகிய உள்ளத்துடன் 
வீடு செல்கிறார் -
"உலகமகா ஆபாசஆடை சேலை" 
என்ற பதாதையினை கண்ணுற்ற 
வயது முதிரந்த அந்த ஹாஜியானி.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018 

சுடுசொல் - 05

Facebook Post


அயல் வீட்டாருடன் எப்போதும் -
முறுகலுடனே அனுகும் குறித்த -
அந்த வீட்டு செல்வந்தர் 
மாவட்ட சமாதான நீதவான் பதவியிலிருந்து 
அகில இலங்கை சமாதான நீதவானாக 
பதவியுயர்வு அடைந்தார்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
1-May-2018

சுடுசொல் - 04

Facebook Post



பிரபல ஹோட்டலொன்றில் 
200/= பெறுமதியான உணவை 
450/=ற்கு வாங்கிவிட்டு 50/=வினை 
டிப்ஸ் ஆக கொடுத்து விட்டு 
வீதியோரமாக நாட்டுமரக்கறி விற்பவனிடம் 
50/= பெறுமதியான பொருளை 45/=ற்கு 
பேரம்பேசி சண்டை பிடித்து வாங்கிவிட்டு 
நிம்மதியாக பெருமூச்சு விட்டார் 
காரிலே வந்த 50/=டிப்ஸ் கொடுக்கும் 
வழமையினை கொண்ட அந்த நல்ல மனிதர்.



-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018

சுடுசொல் - 03

Facebook Post





பிறக்கவிருக்கும் அவனது குழைந்தையையும்,
பெற்றுக் கொடுக்கவிருக்கும் தனது மனைவியையும்,
இந்த நிலையுடன் எந்தவித குறையுமின்றி 
எவ்வாறு பார்த்துக்கொள்வது என்று 
எண்ணியபடி கண்ணீர் சிந்திக்க கொண்டிருந்தான் 
திடீர் விபத்திலே ஊனமான அந்த இளம் கணவன்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018

சுடுசொல் - 02

Facebook Post


இந்த வருட நோன்புப் -
பெருநாளுக்காவது தன் -
பிள்ளைகளுக்கு புத்தாடை -
வாங்கி கொடுத்துவிட வேண்டும் 
என்ற கனவுடன் அந்த புடவைக் கடையினை -
கடந்து செல்கிறாள் 
அன்றாடக் கூலிவேலை செய்யும் 
அந்த அனாதரவற்ற விதவைத் தாய்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018


சுடுசொல் - 01

Facebook Post



அவர் ஏற்பாடு செய்த அன்றைய தின -
மது விருந்திற்காக ஹலால் சின்னம் -
பொறிக்கப்பட்டுள்ளாதா? என்று -
ஒன்றுக்கு இரண்டுமுறை சரி பார்த்துவிட்டுத்தான் 
அந்தக் கோழியினை வாங்கியிருந்தார் 
அந்த வங்கி முகாமையாளர்.

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
30-April-2018

இனி அந்தக் குயில் அதன் குறிக்கோளை அடைந்துவிடும்.

Facebook Post


அடர்ந்த காட்டிலே
ஒற்றையடிப் பாதை பிடித்து
ஒற்றையாக நடந்து செல்லுகையில் 
நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பினால்
அருகேயிருந்த ஆலமர நிழலில்
அமர்ந்து விட்டேன்
சற்றே இளைப்பாறலாமென...
அமர்ந்திருந்த பொழுது
சிறுதூக்கம் என்னைக்-
கவ்விக்கொள்ள முயற்சிக்கையில்,
நான் கனவிலும் மறக்க-
நினைக்கும் சில எண்ணங்கள்
என்னுள் தன்னைத்தானே
மீட்டல் செய்ய ஆரம்பித்தன...
அதிகமான எண்ணங்கள்
தங்களைத் தாங்களே மீட்டல்
செய்யத் தொடங்கியதனால்,
என்னுள் நிசப்தம் அநியாயமாக
கொல்லப்பட்டு விட்டது.
சப்தங்கள் அதிகமானதால்
தூக்கம் கலைக்கப் பட்டது...
தூக்கம் கலைக்கப் பட்டதனால்
தூக்கம் என்னை விட்டுப் பிரிந்து சென்றது...
தன்னைத்தானே மீட்டல் செய்து கொண்டிருந்த
எண்ணங்களை ஒவ்வொன்றாக நான்
மீட்டல் செய்யத் தொடங்கினேன்...
மீட்டல்களின் போது எனக்குள் நானே
சில வார்த்தைகளைக் கூறி
என்னை நானே நகைத்துக் கொண்டேன்.
ஆனால் எனக்குள் நானே பேசுவதாக நினைத்து
அவ்வளவு சப்தமாக பேசியிருக்கிறேன்
என்பதை அந்தக் குயில் என்னருகே வந்து
ஆறுதலுக்காய் தாலாட்டுப் பாடும் வரை
நான் அறிந்திருக்கவில்லை.
(இனி அந்தக் குயில் என்னிடம் வந்தது பற்றி)
அவ்வழியே பறந்து சென்ற குயிலொன்று
என்புலம்பலைக் கேட்டு அவ்விடமே
தரித்து நின்று அனைத்தையும் செவிமடுத்திருக்கின்றது.
புலம்பலை மட்டும் கேட்காத குயில்
என்கண்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த
கண்ணீரினையும் கண்காணித்துள்ளது...
என்நிலை அறிந்த அக்குயில்
சோகம் மறந்து, என் எண்ணங்களின்
மீட்டல்கள் மறந்து
ஆழ்ந்த உறக்கம் என்னை
ஆட்கொள்ளும் வண்ணம்
வறண்டுகிடந்த என் காதுகள்
குளிரும் வண்ணம்
இனிமையோசை எழுப்பியது.
அதன் தாலாட்டுப் பிடித்துப் போன
என் காதுகளும் உள்ளமும்
அந்தக் குயில் உனக்கான உரிமம்
என்ற பாணியில் என்னை
வட்புறுத்த,
என்னிலையும் மறந்து,
அக்குயிலினை என்வசமாக்கி
வாழும் காலமெல்லாம்
வழிநெடுகிலும் குயிலினை
துணையாக்க எண்ணம் கொள்கிறேன்,
இதனால் உண்டாகப் போகும்
விளைவுகளையும் விபரீதங்களையும்
அறிந்திருந்த போதிலும்.
காலம் சில கழிய,
இது ஞாயம்தானா என்ற கேள்வி
என்னுள்ளே தன்னிச்சையாகவே எழுகிறது.
என்னை ஆறுதல் படுத்த வந்த குயிலை,
அத்துமீறி பிடித்து வந்து
கூண்டில் வைக்க முயற்சிப்பது
எவ்விதத்திலும் ஞாயமில்லை.
உண்மையில் அந்தக் குயில் செல்லவிருப்பது
வேறு பாதை நோக்கி.
அதனை அதன் இஷ்டப் பிரகாரம்-
போக விடுவதே சிறப்பு என்பது
மேலே கூறிய அதே அளவான-
சில காலம் கடந்த பின்பே உணர்ந்தேன்.
எனவே விரும்பியதை
விருப்பமில்லாமல்
விட்டுவிட்டேன்...
இனி அந்தக் குயில்
அதன் குறிக்கோளை
அடைந்துவிடும்...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
கிண்ணியா
(04-Jun-2018)


நான் திருடி இருக்கக் கூடாது.

Facebook Post



நேற்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி இருக்கக் கூடும்.
எவ்வாறு நேற்றைய பகலில் இருள் படர்ந்து-
இரவாக உருமாறிப் போனதோ,
அது போலவே கனவொன்று என் மீது படர்ந்து
என்னை இறுகத் தழுவி என்னையும்-
கனவாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது.
கனவு என்னை ஆட்கொள்ள ஆரம்பித்த போது
மெல்லிய கீறல் போன்ற சிறு ஒளிப்பிழம்பு-
ஊற்றொன்றிலிருந்து உருவானது.
கனவு என்னை ஆசையோடு ஆறத்தழுவி இருந்தாலும்,
எனக்கென்னமோ ஊற்றெடுத்து உருவான-
அந்த ஒளிப்பிழம்பின் மீதுதான் ஒரு ஈர்ப்பு உண்டாயிற்று.
உண்டான ஈர்ப்பின் பயன் ஒளிபிழம்பருகே -
சென்று, ஒரு பிடியளவு ஒளியினை-
யாரும் அறியாவண்ணம் கவர்ந்து எடுத்து
என் சட்டைப் பையினுள் ஒழித்து வைத்து விட்டேன்.
களவாடி ஒரு துண்டை நான் கவர்ந்து-
வந்ததற்கு ஒரு காரணமும் உண்டு.
என் குழந்தையின் மகிழ்விற்காய்
அவ்வொளியினை வைத்து
அழகான பறவையொன்று செய்து
கற்பனை மூலம் உயிர்கொடுத்து
அவள் இளைப்பாறும் தூளியினருகே
ஒளிர, ஒளிர, பறக்க விட வேண்டும்,
என்றஙஒரு எண்ணம் மிகுதியாக எண்ணில்-
ஆட்கொண்டதுதான் அதற்கான காரணம்.
விடிந்ததும் வீடு சேர்ந்தேன்...
களவாடி மறைத்து வைத்த
ஒரு பிடியளவு ஒளிப்பிழம்பை
ஆவலுடன் எடுக்கப் பார்த்தேன்...
ஆனால்,
கவர்ந்து வந்த- கையளவு ஒளிப்பிழம்பு
காணமால் போயிற்று,
கவலை மிகுதியுடன் தேடித் பார்த்தேன்...
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஒருவேளை கவர்ந்த ஒளியை
கனவுலகிலேயே கை தவறி விட்டுவிட்டேனோ
என்று எண்ணுகையில்,
எடுத்து ஒழித்து வைத்த ஒளிப்பிழம்பு-
ஒளிரும் சக்தியற்றுக் கிடக்கின்றது என்றும்,
இருளில் மட்டுமே ஒளிரக் கூடிய அந்த ஒளி
ஒளி நிறைந்த இடங்களில் ஒளிராது என்றும்,
கனவுலகம் மட்டுமே அது-
ஒளிர்வதற்கு சாத்தியமான தளம் என்றும்,
என்னுள் அசரீரி ஒன்று அழுத்தமாய் தெளிவு படுத்தியது.
அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான்...
நான் திருடியிருக்கக் கூடாது என்பதை.
பாவம் இருளின் மத்தியில் -
எப்போதுமே ஒளிர்ந்து கொண்டிருந்த -
அந்த ஒளிப்பிழம்பு இப்போது
என்னால் ஒளியிழந்து கிடக்கிறது.
அந்த ஒளிப்பிழம்பு ஒருநிமிடமேனும்
ஒளியிழந்து கிடப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஆசையோடு கவர்ந்து அந்த ஒளிப்பிழம்பை
எடுத்த இடத்திலேயே மீண்டும்
வைத்து விடவேண்டும்.
அதற்கென இன்றைய தினம்
ஒளிமீது கொண்ட ஈர்ப்பை
விரும்பியோ விரும்பாமலோ
கனவின் மீது வைக்க வேண்டும்.
கனவோடு நான் கனவானாலும்
திருடியதை நான் திருப்பி வைத்து விட வேண்டும்.
-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
04-Jun-2018



Imru's பத்திரிகைப் பிரசுரம் - 01

Facebook Post



அல்ஹம்துலில்லாஹ்...
1-June-2018 அன்று பிரசுரிக்கப்பட்ட எங்கள் தேசம் பத்திரிகையில் பதிப்புரு பெற்ற எனது கிறுக்கல்.
இத்தனை நாளாக முகப்பத்தகத்திலே கிறுக்கிக் கொண்டிருந்த எனக்கு முகப்பத்தகம் தாண்டிய ஒரு முகவரியினை அறிமுகம் செய்து வைத்த Irsath Imamdeen அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

-நன்றி-

-
இது: முஹம்மது இம்ரான் அஷ்ரப்-
(கிண்ணியா)
2-June-2018




அனுதினமும் எதிர்பார்க்கிறேன்...

Facebook Post





என்றேனும் நடந்திடுமா?...
நீண்ட நெடுந்தூரம், தனியாக -
நடந்து செல்ல யாசிக்கின்றேன்...
தனிமைக்கு துணையாக என்னருகில்
நீயும் இருக்கவேண்டும் என்பதும்
என் யாசகத்தில் ஒரு பாதி...
நெடுஞ்சாலைப் பயணத்தில்
மழைமேகம் பின்தொடர்ந்து
வெக்கையுணரா வண்ணம்
நிழல் தந்து காக்க வேண்டும்...
பின்தொடரும் மழைமேகம்,
அப்பப்போ தூரல் மழை -
பொழிய வேண்டும்...
புல் படர்ந்த பாதையிலே
பொடிநடையாய்ப் போகையிலே
சாலையோர மலர்களெல்லாம்
நறுமணத்தோடு வாழ்த வேண்டும்.
காற்றிலே தவழ்ந்து வரும்
குருவிகளின் மெல்லிசையும்,
காற்றிலே மிதந்து வரும்
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களும்,
கண்காட்சி போல் நிகழ வேண்டும்...
காதுகளும் சுவை அறிய வேண்டும்...
இடைவிடாது நான் பேச,
இடையிடையே நீ பேச,
பேச்சின் ஸ்வரம் எம்மிடையே
இன்னிசையாய் ஒலிக்க வேண்டும்.
உனக்கானவன் நானில்லை
நினைக்கையில் எனக்கானவள் நீயன்றோ...
நிறைவேறா ஆசைதான்
இருப்பினும் நினைப்பதில் தவறில்லை.
இன்றுதான் நடந்தாலும்
இனியொரு ஜென்மம் எடுத்தாலும்
நடக்காமல் போனாலும்
தினம் தோறும் நினைனவேனே...
நான் உன்னை மறவேனே...


-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
2-June-2018


நான் பேனா.

Facebook Post


ஒரு பொழுதேனுமில்லை உனை - நினைக்காமல் நான்,
சிறு கணமேனுமில்லை உனை -
நெருங்காமல் நான்...
ஏக்கம் கொண்டு உனை எட்டிப் பார்க்கிறேன்.
வெருமை படர்ந்த வெண்மைக் -
காகிதாமாய் நீ -
எனக்குக் காட்சியளிக்கிறாய்.
உன் வெண்மைத் தேகத்தில் -
என்னில் வடிந்தோடும்,
வண்ணத்திரவியம் கொண்டு,
புதுக் காதல் கதை வரைய -
ஆசை கொள்கிறேன்...
ஆசை கொண்ட நான்,
ஆசுவாசமாய் அடங்கிக் கிடப்பது சரிதானா?...
உங்கள் கேள்வி நியாயமற்றதன்று...
அதற்கு காரணமும் உண்டு...
காதலை வரைய -
என்னிடம் வரிகள் இல்லாமலுமில்லை...
வர்ணங்கள் தீர்ந்து வழியில்லாமலும் நான் இல்லை...
நான் வரைந்துதான் காகிதத்திற்கு என் காதல் கதை தெரிய வேண்டுமென்ற தேவையுமில்லை...
பொதுவாக வெண்மையை நேசித்தேன் நான்,
ஆனால்...
காகிதம் வர்ணமையை நேசிக்குமா?...
என்ற பயமுண்டு என்னிடம்,
சில வேளை காகிதம் வர்ணமையை ஏற்றாலும்
அது என்னிடத்திலுல்ல வர்ணமையை ஏற்குமா?...
என்ற சிறிய சந்தேகமும் உண்டு.
இதில் காரணமாக இன்னுமொரு விடயமுமுண்டு...
அதனை இங்கு பகிர்தலில் எனக்கு உடன்பாடில்லை...
அது என் நிற-மையோடு மையாக வடிந்தே போகட்டும்.
இப்படிக்கு...
வெறுமை படர்ந்த வெண்மைக் காகிதத்தைக் காதல் செய்யும் காலாவதியான பேனா.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
24-May-2018



சொல்லப்படாத காதல்.

Facebook Post


ஓவ்வொரு முறையும் அந்தப் -
பூவினை காண்கின்ற போது,
அருகில் சென்று காதோரம் -
இதழ் வைத்து காதலினை சொல்லிடவே -
அந்த தேனீ தினம் விரும்புகின்றது...
ஆனாலும் சொல்லி விடாமலேயே
ஒவ்வொரு நொடியையும் கடந்து செல்கின்றது.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
21-May-2018



நான் நிறங்களை நேசிக்கின்றேன்.

Facebook Post


கடுமையான இருளையும்,
யாதேனுமற்ற தனிமையையுமே -
நான் அதிகமாக நேசித்தேன்.
காயங்களுக்கான மருந்துகள் அங்குதான் -
கிடைக்குமென பெரும்பாலான 
எனது எண்ணங்கள் எனக்கு கற்பித்து தந்தன...
காலங்களின் பயணத்தில்,
நானடைந்து கிடந்த இருளின் கனதியில்,
என் வார்த்தைகளின் ஏக்கத்தில்,
ஆர்வமுற்ற ஒரு நிறக்கலவை -
ஆதரவாக என்னிடம் வந்தது...
நிறக்கலவை என்னை
புதிதான ஒரு நிற உலகிற்கு அழைத்துச்சென்று,
நிஜங்கள் சிலவற்றையும்,
நிறங்கள் பலவற்றையும் கற்றுத்தந்து.
இப்பொழுதெல்லாம் நிறங்களையே -
அதிகம் நேசிக்கின்றேன்...
இருள் நிறைந்த எனது கடந்த -
காலக் கனாக்கள் பல
நிறங்களாகவே மீண்டும் வந்து செல்கின்றன.
நிறக்கலவையே உனக்கே அனைத்து நன்றிகளும்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
21-May-2018



தூரநோக்குடைய புரிதல்

Facebook Post


திட்டமிட்டோ அல்லது தேவையுணர்ந்தோ
இருவேறு திசைகளில் உண்டான -
இரு நதிகளும், சில காலம் கடந்து
இணைந்து பயணிக்க சந்தர்ப்பம் கிடைத்தும் -
சேராமலே பிரிந்து செல்கின்றன...

இரண்டுமிணைந்தால்
ஒருவேளை - வெள்ள அதிகரிப்பால்,
புரிதல்கள் இல்லாமல் கட்டப்பட்ட -
அந்தக் குடிசைவீடு மூழ்கிவிடக்கூடும்
என்ற ஒற்றைக் காரணத்திற்காய்...

இங்கு தூரநோக்குடைய புரிதல்கள் மிகைத்து கிடக்கின்றன...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
21-May-2018



வெற்றுக் காகிதங்களாலான வெள்ளைப் புத்தகம்.

Facebook Post


யாருக்கேனும் வழி தெரிந்தால் என்னைக் காப்பாற்றுங்கள்...
வெற்றுக் காகிதங்களால் ஒரு புத்தகம் உருவாக்கப் பட்டிருந்தது.
அந்த புத்தகத்தை வெறுமனே படித்துவிட முடியாது.
சிலர் அதனை ஆர்வத்துடன் கையிலெடுத்தனர்...
படிக்க சிரமமாக உள்ளதென தூக்கி தூர போட்டனர்.
தூக்கியெறியப்பட்ட அந்த புத்தகம் -
என்னிடம் வந்து சேர பல காலங்களாகிவிட்டான.
என்னிடம் கிடைக்கப் பெரும் போது -
எனக்கு அத்தனை சுவாரஸ்யமாக தோன்றவில்லை.
படிக்க ஆராம்பித்த நான் அதனுள் புகுந்து கொண்டேன்.
புகுந்து கொண்ட நான் எனக்கென -
ஒரு இடத்தினையும் அமைத்துக்கொண்டேன் .
எனக்கென ஒரு இடம் அமைத்த நான்
சுவாரஸ்யமாக படித்துக் கொடுக்கிறேன் அந்த புத்தகத்தை.
இப்பொழுது எனக்குள் ஒரு சிந்தனை என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது,
ஆர்வமிகுதியால் உள் நுழைந்த நான் -
வந்த பாதையினை மறந்துவிட்டேன்.
இன்னும் சில காலம் கழிய நான் வெளியில் போகவேண்டி இருக்கும் .
ஏனெனில்,
அந்த புத்தகத்தை படித்து முடிக்க இன்னும் ஒரு சில பக்ககங்களே எஞ்சியுள்ளன.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
12-May-2018

Monday, June 4, 2018

என்னைத் தொலைத்து விட்டேன்.

Facebook Post

தொலைந்து போன என்னை,
நான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
யாரேனும் காண்பின் -
என்னிடம் தகவல் தாருங்கள்.
யாரேனும் கண்டெடுப்பின் -
தயவு செய்து தந்து விடுங்கள்.
யாரேனும் தேடுவதற்கு முயற்சிப்பின் -
கொஞ்சம் கவனமாக தேடுங்கள்,
தேவையில்லை என்று வீசியெறிந்த -
குப்பையில் கூட கிடைக்கலாம்.
தொலைந்து போன என்னுள் தான் சில-
எண்ணங்களை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன்.
அது எனக்கு இப்பொழுது தேவைப் படுகின்றது...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
9-May-2018


தனிமை உலகம்

Facebook Post

எனக்கென நான் உலகொன்றைப்
 படைத்துள்ளேன்,
 என் எண்ணங்களைக் கொண்டு...

அதனை மென்மேலும் 
மெருகூட்ட வேண்டுமென்று 
இன்னும் எனது எண்ணங்களை 
வண்ணங்களாக சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.

நிச்சயமாக அங்கு உனக்கும் ஓர் இடமுண்டு...
இப்பொழுதிலிருந்தே எண்ணங்களை -
பறவையாக்கி பறக்கக் கற்றுக்கொள்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
9-May-2018


புரிந்துகொள்ளும் திறன்

Facebook Post

"தெரிந்ததை தெரியாதவர்களுக்குக் 
கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வி."

ஆனால் தற்காலத்தில் பெரும்பாலான சிலர் 
அவர்கள் கற்றுத் தேராத 
அல்லது அவர்களால் தெரிந்து, அறிந்து கொள்ளப்படாத 
சில விடயங்களை அடுத்தவர்களுக்கு 
கற்றுக் கொடுக்கும் ஆசான் ஆகிவிடுகின்றனர்.

அத்தகைய ஆசான்களிடம் அவர்களால் 
கற்பிக்கப்படுகின்ற அவர்கள் அறிந்திராத 
குறித்த சில விடயங்களை 
அதே விடயத்தில் கற்றுத் தேர்ந்த ஒருவர்
 எடுத்துரைத்தாலும் அதனை அவர்கள் 
ஏற்றுக்கொள்ளும் படியாக 
கற்றுத் தேர்ந்தவரின் கருத்துக்களையோ,
விளக்கங்களையோ பார்ப்பதுமில்லை அனுகுவதுமில்லை.

காரணம் யாதாக இருக்க வேண்டுமென்றால் 
புரிதல்கள் குன்றிய அத்தகை 
அறிஞர்களிடம் புரிந்துகொள்ளும் திறன்களிலும் -
பார்க்க குதர்க்கமே நிறைந்து காணப்படுகின்றது எனலாம்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
9-May-2018


புரிதல்கள்

Facebook Post




புரிதல்கள் குன்றியவர்களின் 
புரிதல்களினாலேயே புரிந்துணர்வினால் 
பார்க்கப்பட வேண்டிய பல விடயங்கள் 
புரிதல்களின்றி பார்க்கப் படுகின்றன...

அதனாலேயே பல உறவுகள், 
பல இடங்களில், 
பல்வேறு சந்தர்ப்பங்களில்
 புரிதல்களற்ற சில,- 
பல, காரணங்களுக்காக 
பகை கொண்டு 
புறம்கூறி ,இகழ்ந்து -
தூற்றி பிளவுண்டு வாழ்கின்றனர்.

குறிப்பு : நிச்சயமாக இது ஒருவருக்கானதன்று, மாறாக ஒவ்வொருவருக்குமானது.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
8-May-2018


கனவிலே காதலை வென்றான்.

Facebook Post

மலரவிருக்கும் விடியலை சுவைக்க அவனுக்கு
அந்த இரவினைக் கடக்க வேண்டியிருந்தது.
அன்றைய இரவினைக் கடப்பது 
மிகுந்த சிரமமாக இருக்கக்கூடும் 
என்றே அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
அதே சமயம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த
அந்த இரவு அவனை எச்சரித்தது.
அவனை ஒரு கனவு கவ்விக் கொள்ளப்-
 போவதாக காரணமும் சொன்னது.

சொன்னது போலவே தூக்கம் அவனைக்
கவ்விக்கொண்ட வேளை,
அந்தக் கனவு அவனை ஆட்கொண்டது.
ஆட்கொண்ட கனவு வழமை போன்று
பயங்கரமானதாக இருக்குமோ 
என்ற அச்சத்துடனேயே -
அந்த கனவினை ஏற்றுக் கொள்கிறான்.

ஆனால் மலர்ந்ததோ,
நாளைய எந்த விடியலுக்காக
காத்துக் கொண்டிருந்தானோ!
நிச்சயமாக அதே விடியல்தான் அந்த கனவிலும்.
மிகுதியாக மகிழ்ந்தவனாக,
முழுமையாக அந்தக் கனவினை சுவைக்கத் தொடங்கினான். 
அந்த மிகுதியான மகிழ்விற்கு காரணமும் உண்டு…

கனவின் மூலம் விடிந்த, 
மலரவிருக்கும் அந்த விடியலில்தான்
முதன் முதலாக அவனது காதலை-
அவளிடம் ஒப்புவிக்கவிருந்தான்.
அதிசயமென்னவெனில்,
நிஜத்திலே அவனது அழைப்பினை ஏற்ற அவளும் 
அந்தக் கனவிலே வீற்றிருந்தாள்.
ஒத்திகைக்கு சரியான சந்தர்ப்பம் -
இதுவே என எண்ணியவன்,
இந்த கனவினை நாளைய நிகழ்வின் 
நகலாக பயன்படுத்தி
கிடைத்த சமயத்தில் 
காதல் காவியம்மொன்று நடத்தி முடித்தான். 

காதலிற்கான அவனது கோரிக்கை 
காதலி அவளால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அவளால் காதல் அங்கீகரிக்கப்பட்டாலும்,
விடியவிருக்கும் அந்த விடியலில்தான்
அதற்கான உண்மை அங்கீகாரம் விவரிக்கப்படும்...

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
7-May-2018


ஆண் மனிதனாக இருப்பதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

Facebook Post

ஆண் மிருகங்கள்-
பல்வேறு பெண் மிருகங்களோடு-
 இன கலப்பு செய்கின்றனதான்,
 அதனை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் எந்த மிருகமும்
 கன்றுகளை (குட்டி மிருகம்) 
காம வேட்கை தனிக்க 
பயன்படுத்துவதில்லை... 
மனிதர்களையன்றி...😢😢.



-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
16-Apr-2018


bg😢